திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்திவரப்பட்ட ரூ16. லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

0 319

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ஒரு பயணி கொண்டு வந்திருந்த டிராலி பேக்கை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த பேக்கின் ஸ்குரு பொருத்தி உள்ள பகுதியில் ஸ்குருவை நீக்கி பார்த்தபோது அதற்குள் சிறிய ஆணி வடிவில் தங்க கம்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments