தூத்துக்குடியில் மாடுகளை திருடியதுடன் அவை இருக்கும் இடத்தை அட்டையில் எழுதி வைத்த திருடன்

0 423

சாத்தான்குளம் அருகே மாடுகளை திருடிச் சென்ற திருடன் போலீசில் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் அவைகள் இருக்கும் இடத்தை அட்டையில் எழுதி வைத்துவிட்டு தப்பினார். 

ஞானியார்குடியிருப்பைச் சேர்ந்த பட்டுராஜ் என்பவருக்கு சொந்தமான 2 கறவை மாடுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்து தேடி வந்துள்ளார்.

இன்று காலை தோட்டத்திற்கு சென்றபோது வாசலில் இருந்த வேலியில் மாடு இருக்கும் இடத்தை யாரோ எழுதிவைத்து சென்றதையடுத்து அங்கு சென்ற பட்டுராஜ் மாடுகளை மீட்டு தனது தோட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments