காட்டு யானைகள் தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு... யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர்

0 280

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தீர்த்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்ற 70 வயது முதியவர், தனது விவசாய நிலத்துக்குச் சென்றபோது ஒற்றைக் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் மேடிமுத்துக் கோட்டையைச் சேர்ந்த 55 வயதான அப்பையா என்பவர், ஜவளகிரி வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது விளைநிலத்துக்குச் சென்றபோது, ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments