கள்ளக்குறிச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு கரும்பு தோட்டத்திற்குள் ஒளிந்து கொண்டு போக்கு காட்டிய 2 இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

0 365

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்டு, கரும்பு தோட்டத்திற்குள் ஒளிந்து கொண்டு போக்கு காட்டிய 2 இளைஞர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தனியார் பள்ளி ஆசிரியரான ஜாக்குலின் மேரி நேற்று மாலை திருக்கோவிலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர்கள், நான்கு முனை சந்திப்பு அருகே அவரது நாலரை சவரன் தாலிச் செயினை பறித்துள்ளனர்.

தப்பியவர்களை தனிப்படை போலீசார் பின்தொடர்ந்த நிலையில், வாகன சோதனையும் நடைபெற்றது. அப்போது, மாம்பழப்பட்டு அருகே வண்டியை போட்டுவிட்டு கரும்புத் தோட்டத்திற்குள் ஒளிந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் இரவு முழுவதும் தேடி பிடித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments