தடை செய்யப்பட்ட கல்குவாரியில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய 3 கல்லூரி மாணவர்கள் 1 உடல் மீட்பு, 2 பேரை தேடும் பணி

0 343

செங்கல்பட்டு மாவட்டம், கீரப்பாக்கத்தில் உள்ள தடை செய்யப்பட்ட கல்குவாரியில் தேங்கிய நீரில் குளிக்க சென்று நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் தீபக்சாரதி, முகமது இஸ்மாயில், விஜய்சாரதி, பாசித் மற்றும் சூர்யா ஆகியோர் நேற்று கல்குவாரி பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதில் தீபக்சாரதி, முகமது இஸ்மாயில், விஜய்சாரதி மட்டும் நீரில் இறங்கியபோது, மூழ்கியதாக கூறப்படுகிறது. மற்ற இருவர் தகவல் அளித்ததையடுத்து, காலை முதல் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர், விஜய்சாரதியின் உடலை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments