வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்... அமேதி, ரேபரேலி தொகுதிகளில் ராகுல், பிரியங்கா வத்ரா போட்டி?

0 239

மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 49 தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு மே 3-ஆம் தேதி கடைசி நாளாகும்.

5ஆம் கட்டத்தில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுலும், ரேபரேலி தொகுதி பிரியங்கா வத்ராவும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பிலும், ராகுல், பிரியங்கா தரப்பில் இருந்தும் எந்தத் தகவலும் இல்லை.

வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே எஞ்சியுள்ள நிலையில், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து இன்று முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments