தொழிலதிபரை வரவழைத்து மிரட்டி ரூ.11 லட்சம் பறிப்பு

0 287

பேஸ்புக்கில் அறிமுகமான சேலம் தொழிலதிபரை ஆசைவார்த்தை கூறி நெல்லைக்கு வரவழைத்து 11 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை பறித்த பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தொழிலதிபரான நித்தியானந்தத்தை லாட்ஜில் சந்தித்து அந்த பெண் தனிமையாக இருந்த போது திடீரென 4 ஆண்கள் உள்ளே நுழைந்து அவரை மிரட்டி பணம் பறித்ததோடு, காசோலை மூலமாக வங்கியில் பணம் எடுத்து தர வேண்டுமெனவும் இல்லையென்றால் பாலியல் பலாத்கார வழக்கு போடுவோம் என மிரட்டி உள்ளனர்.

வங்கிக்கு செல்லும் வழியில் தான் கடத்தப்பட்டது குறித்து நிந்தியானந்தம் சேலத்தில் உள்ள தனது நண்பருக்கு தகவல் தெரிவித்தார். அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து செல்போன் சிக்னல் மூலமாக நித்தியானந்தம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீஸார் தகவல் கிடைத்த அரை மணி நேரத்திற்குள் தொழிலதிபரை மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments