குமரி மாவட்டத்தில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த மகள்

0 409

குமரி மாவட்டம் கடுக்கரையில், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த தந்தையை மகள் கட்டையால் அடித்து கொலை செய்தார். கூலித்தொழிலாளியான சுரேஷ் மதுவிற்கு அடிமையானதால் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதாக தெரிகிறது.

குடிப்பழக்கத்தால் அவருக்கும், கல்லூரியில் படித்துவரும் அவரது மகள் ஆர்த்திக்கும் அடிக்கடி சண்டை நடந்துவந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 25-ஆம் தேதி,  குடிபோதையில் வீட்டு திண்ணையில் படுத்து தூங்கிய சுரேஷ் மர்மமான முறையில் இறந்துகிடந்ததாக ஆர்த்தி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

பிரேத பரிசோதனையில் அவரது தலையில் பலமாகத் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆர்த்தியிடம் போலீசார் விசாரித்தபோது, குடித்துவிட்டு வீட்டிற்குள் வர வேண்டாம் என தாம் கூறியதை மீறி வீட்டிற்குள் வந்ததால் கட்டையால் தலையில் தாக்கியதாக அவர் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments