நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்

0 316

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் சுமார் 9 மணி நேரம் சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

எந்தெந்த தொழில் நிறுவனங்களில் இருந்து கீழ்பாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு பணம் கொண்டுவரப்பட்டது.

இந்த பணத்தை பேக்கிங் செய்து கொடுத்தது யார்? எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 பேரையும் ஏற்றிவிட்டது யார்? நெல்லையில் 4 கோடி ரூபாய் பணத்தை யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை அவர்களிடம் கேட்டு வாக்குமூலம் பெற்றனர்.

மேலும் சதீஷ் உள்ளிட்ட 3 பேரின் செல்போன்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் விசாரணை தீவிர படுத்தப்படும் எனவும், நயினார் நாகேந்திரனுக்கும், விரைவில் சம்மன் அனுப்பப்படும் எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments