சிறந்த திருமணப் பரிசு எது?... தேர்தல் ஆணையம், போலீஸ் வழக்கு வரை சென்ற திருமண பத்திரிகை

0 333

நீங்கள் தரக்கூடிய சிறந்த திருமணப் பரிசு, பிரதமராக மோடியை மீண்டும் தேர்வு செய்வதுதான் என தமது திருமண பத்திரிகையில் அச்சடித்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடாவில் கடந்த 18ஆம் தேதி திருமணம் முடிந்த கையோடு, மணமகனின் வீட்டிற்கு தேர்தல் ஆணைய பார்வையாளர்கள் வந்து விசாரித்தனர்.

பிரதமர் மீதான அபிமானத்தில் அச்சிட்டதாகவும், தேர்தல் அறிவிப்பிற்கு முன் மார்ச் 1ஆம் தேதியே பத்திரிகை அச்சிடப்பட்டதால் விதிமீறல் இல்லை என்றும் மணமகன் அளித்த விளக்கத்தை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக மணமகன் மட்டுமின்றி அச்சக உரிமையாளர் மீதும் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments