வெடிகுண்டு கலாச்சாரம் மிகுந்த காங்கிரஸ் ஆட்சி வேண்டுமா? - பிரதமர் மோடி

0 311

தீவிரவாதம் தலைதூக்கிய போதெல்லாம் காவி தீவிரவாதம் என்ற பழியை சுமத்தி, அப்பாவி இந்துக்கள் சிறையில் தள்ளப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மும்பை தீவிரவாத தாக்குதலில் அப்பாவி இந்துக்களை சிக்க வைக்க காங்கிரஸ் சதி செய்ததாகவும் சாடினார்.

பல குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணமான இந்தியன் முஜாஹிதின் தீவிரவாத அமைப்பின் தலைவன் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஆதரவாக பேசியவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்றும் மோடி தெரிவித்தார்.

தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் தூக்குத் தண்டனையை நிறுத்த நள்ளிரவில் நீதிமன்றத்தை திறக்க வைத்தவர்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்றும் மோடி சாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments