கென்யாவில் வழக்கத்தைவிட அதிகமாக பெய்துவரும் கனமழை... 17 குழந்தைகள் உள்பட 42 பேர் வெள்ளத்தில் சிக்கி பலி

0 276

கென்யாவின் மாய் மாஹி நகரில் பெய்த கனமழையால், அதிகாலையில் அணை உடைந்து ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை 17 குழந்தைகள் உள்பட 42 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

காலநிலை மாற்றத்தால், கென்யா, தான்சானியா, புருண்டி போன்ற கிழக்காப்ரிக்க நாடுகளில் வழக்கத்தை விட அதி கனமழை பெய்துவருகிறது. கென்யாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கனமழை, வெள்ளத்தால் 140 பேர் உயிரிழந்ததாகவும், ஒரு லட்சத்து 85 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments