போலீஸ் எச்சரிக்கையை மீறி பைக் சாகசம் செய்த சிறுவர்கள்

0 390

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் தங்கள் எச்சரிக்கையை மீறி 2-வது முறையாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட சிறுவர்களின் பெற்றோரை வரவழைத்து மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.

10 நாட்களுக்கு முன் திங்கள் நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் சாகசம் செய்த சிறுவர்கள் 2 பேரை பிடித்து, அவர்களின் பைக்கை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீசார், சிறுவர்கள் கெஞ்சியதை அடுத்து எச்சரித்து அனுப்பியதாக தெரிவித்தனர்.

காவல் நிலையத்துக்கு வெளியே வந்த சிறுவர்கள், வாசலில் நின்றிருந்த தங்களை பைக்கை படம் பிடித்து, கில்லி பட வசனத்துடன் மீண்டும் பைக் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments