சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மே. வங்க அரசு முறையீடு

0 228

சந்தேஷ்காளி விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

இதன் மீதான விசாரணை ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனிடையே, சந்தேஷ்காளிக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், தேசிய பாதுகாப்புப் படையினர் உதவியுடன்,  சோதனை நடத்தினர்.

ஷேக் ஷாஜகான் உள்ளிட்டோர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிநாட்டுத் துப்பாக்கிகள், வெடிபொருள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments