புழல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.1.11 லட்சம், முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்

0 136

சென்னையை அடுத்த புழல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 9 மணி நேரம் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கில் வராத ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியுள்ளனர்.

சாலை பணிகளுக்கான டெண்டர் விடுவது, செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு காசோலை வழங்குதல் போன்றவற்றுக்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக வந்த காரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் மணி சேகர் மற்றும் அலுவலக மேலாளரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments