6 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு.. தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..!

0 469

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே 6 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகனுக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் 69 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கடந்த 2014 ஆம் ஆண்டு சிறுமி ஒருவரின் பாட்டி அளித்த புகாரையடுத்து முருகன் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments