திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்த விவகாரம்... தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது

0 455

ஸ்ரீரங்கத்தில் கல்லூரி மாணவி மாடியிலிருந்து விழுந்து இறந்த விவகாரத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.

ஜெயஸ்ரீ என்ற அந்த 19 வயது மாணவி, கிரோஷ் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை பள்ளி படிக்கும் போதில் இருந்து காதலித்து வந்ததாகவும், அண்மையில் நண்பர் ஒருவரின் வீட்டு மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்த போது கீழே விழுந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக திருமணம் செய்து கொள்ள தாம் சம்மதிக்காததால் ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாக கிரோஷ் கூறியது பற்றி விசாரித்த போலீசார், தற்கொலைக்குத் தூண்டியதாக கிரோஷை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments