பட்டாக்கத்தியால் தாக்கி முதியவரிடம் பணம் பறித்த கஞ்சா போதை கும்பல்... சிக்கிய இருவரை நையப்புடைத்த பொதுமக்கள்

0 468

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே 60 வயதான காஜா மொய்தீன் என்பவரை பட்டாக் கத்தியால் தலையில் வெட்டிப் பணம் பறித்த கஞ்சா போதை கும்பல் ஒன்று,

தடுக்கச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா என்பவரின் கையையும் வெட்டியுள்ளது. கஞ்சா போதை கும்பலை பொதுமக்கள் சுற்றி வளைத்தபோது, அவர்களில் இருவர் தப்பிவிட்டனர்.

அபிஷேக், குரு என இருவர் மட்டும் சிக்கிய நிலையில், பொதுமக்கள் அவர்கள் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments