மூன்றாவது முறையாக நகரியில் வெற்றி பெறுவேன் என்று நடிகை ரோஜா உறுதி

0 413

ஆந்திராவில் அடுத்த மாதம் 13-ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தலுடன், சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில அமைச்சரான நடிகை ரோஜா, நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் .காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.

இதற்காக, நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலமாக சென்று அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நகரி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை ரோஜா வெற்றி பெறுவார் என்று அவரது கணவரும் , திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments