மேலதிகாரி அவமானப்படுத்தியதாகக் கூறி பணி ராஜினாமா.. சிவில் சர்வீசஸ் தேர்வில் 780-வது இடத்தை பிடித்த முன்னாள் காவலர்..!!

0 513

ஆந்திராவைச் சேர்ந்த உதய்கிருஷ்ண ரெட்டி என்ற முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில் 780-வது இடத்தை பிடித்துள்ளார்.

2018-இல் சக பணியாளர்கள் 60 பேர் முன்னிலையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவமதித்ததாகக் கூறி காவலர் பணியை ராஜினாமா செய்த ரெட்டி, தேர்வுக்கு தீவிரமாக படித்து தேர்ச்சியடைந்துள்ளார்.

780-வது இடம் பிடித்தவரால் ஐ.ஏ.எஸ். ஆக முடியாது என்பதால், தான் படித்து உயர்பதவிக்கு வரக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டவர்களுக்கு பதிலடி தரும் வகையில் மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதப்போவதாக  ரெட்டி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments