பசுமை வாக்குச்சாவடி மையம் அமைத்துள்ள தேர்தல் அதிகாரிகள்... வாயிலில் வாழை மரம், நுங்கு தோரணம் கட்டி சிறப்பு ஏற்பாடுகள்

0 354

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கத்தில் தேர்தல் அதிகாரிகள் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைத்துள்ளனர்.

வாயிலின் இருபுறமும் வாழை மரங்களை வைத்து, நுங்கு தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ள அந்த வாக்குச்சாவடிக்குள், வாக்குப்பதிவு செய்யும் அறைகளின் வாயிலில் மாவிலை மற்றும் சாத்துக்குடி தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்டவற்றை வைக்கும் மேஜைகளும் தென்னை ஓலை மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments