சென்னையில் தனியார் கல்லூரி நிர்வாகியிடம் ரூ.1.5 கோடி வழிப்பறி - 9 பேர் கைது... ரூ.41 லட்சம், நகைகள், பைக்குகள் பறிமுதல்

0 234

சென்னை மயிலாப்பூரில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2 ஆம் தேதி கல்லூரி நிர்வாகி ராஜா என்பவர் சாய்பாபா கோவில் அருகே இரவு பைக்கில் சென்றபோது வழிமறித்து, அவரிடம் இருந்து கத்தியைக் காட்டி மிரட்டி மிரட்டி பணத்தை அக்கும்பல் பறித்துவிட்டு தப்பியுள்ளது.

தற்போது சிக்கிய கும்பலிடம் இருந்து 41 லட்ச ரூபாய் ரொக்கம், நகைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments