சரக்கு வாகனத்தில் 1,300 கிலோ குட்கா பறிமுதல்; காரில் ரூ.35,000 ரொக்கம் பறிமுதல்

0 197

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள தோட்டிலோவான்பட்டி சோதனைச் சாவடி அருகே போலீசார் வாகன சோதனை நடத்தியபோது அவ்வழியாகச் சென்ற கார் மற்றும் சரக்கு வாகனத்தை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் அதிவேகமாக சென்றதால் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

சோதனையில் சரக்கு வாகனத்தில்  அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 1,300 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரில் குட்கா விற்பனை செய்த பணம் 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments