அண்ணா பல்கலை. பதிவாளர் நியமனத்திற்கு எதிராக வழக்கு... சிண்டிகேட் கூட்ட வீடியோ பதிவை பத்திரப்படுத்த உத்தரவு

0 1218

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக முனைவர் பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில்
சிண்டிகேட் கூட்டங்களின் வீடியோ பதிவை பத்திரப்படுத்தும்படி அண்ணா பல்கலைகழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பிரகாஷை பதிவாளராக நியமிக்க சிண்டிகேட் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், சிண்டிகேட் கூட்ட முடிவுகளை திருத்தி பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஜூன் 7 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments