தமிழகத்தில் 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் முறையில் கண்காணிப்பு: சத்யபிரதா சாகு

0 160

தமிழகத்தில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும்  65 சதவீத வாக்குச்சாவடிகள் வெப் கேமரா முறையில் கண்காணிக்கப்பட உள்ளதாக கூறினார்.

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை அளிக்கலாம் என்று கூறிய அவர், சிறைவாசிகள் சம்பந்தப்பட்ட சிறை கண்காணிப்பாளர்களிடம் உரிய விண்ணப்பத்தை அளித்து வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments