என்னது தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி வாங்கனுமா ? சுத்துப்போட்ட பறக்கும்படை.. சூடான ஸ்ரீனிதி கார்த்தி..!

0 486

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி, மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு பிரச்சாரம் செய்ய கிளம்பிய போது தேர்தல் அதிகாரிகள் எங்கு பிரச்சாரம் செய்யப் போகிறீர்கள் ?அனுமதி கடிதத்தை காண்பியுங்கள் என்றனர்

அனுமதி கடிதம் இல்லாமல் விழித்த ஸ்ரீநிதி, வெளியே நிற்க மனமின்றி காருக்குள் சென்று அமர்ந்து கொண்டார்

மற்ற பெண்கள் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கனுமா ? என்று கேட்டு தேர்தல் அலுவலருடன் வாக்குவாதம் செய்தனர்

“அனுபவமுள்ள கட்சிகாரங்களா இருக்கீங்க ஒத்துழைப்பு கொடுங்க”.. என்று சொல்ல அதனை மீறி பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனால் ஸ்ரீனிதி, வித்யாகணபதி, திமுக நகர செயலாளர் பொன்னுச்சாமி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments