உலகத் தரத்தில் கோவை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படும்: அண்ணாமலை

0 215

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வினர் பிரதமர் மோடி பக்கம் வந்துள்ளதாகவும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அவர்கள் பணியாற்றிவருவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

சூலுரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க தலைவர்கள் ஒரு மாய உலகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.

தான் வெற்றி பெற்றால், கோவை ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்த, அனைத்து வசதிகளையும் கொண்ட பன்னடுக்கு நிலையமாக தரம் உயர்த்தப்படும் என்று அவர் கூறினார்.

அரிசி வழங்கப்படுவதை போல், ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பாரத் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments