நயினார் நாகேந்திரன் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி : பாதிக்கப்பட்டதாக கருதினால், தேர்தல் முடிந்த பின்னர் வழக்கு தாக்கல் செய்யலாம் - நீதிபதிகள்

0 439

வழக்கு மற்றும் சொத்து விபரங்களை மறைத்ததாகக்கூறி திருநெல்வேலி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

வாக்குப்பதிவை தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதிகள் எஸ்.வி.கங்காபூர்வாலா, ஜெ.சத்திய நாராயணா பிரசாத் அடங்கிய அமர்வு, மனுதாரர் பாதிக்கப்பட்டதாக கருதினால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments