தென் சென்னையில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் உடன் வாக்கு சேகரித்த தமிழிசை வாக்கு சேகரிப்பு

0 358

தென்சென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் வி.கே.சிங் உடன் துரைப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது 500 ரூபாய் தாள்களால் செய்யப்பட்ட மாலை மற்றும் கிரீடத்தை அணிவிக்க வந்த நிர்வாகிக்கே அதனை தமிழிசை அணிவித்தார்.

தான் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுடன் ஜூம் மீட்டிங்கில் கலந்துரையாடிய போது வேண்டுமென ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டதாக குற்றஞ்சாட்டிய தமிழிசை, ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம், டாஸ்மாக்கை மூடுவோம் என்று கூறிய முதலமைச்சரின் வாக்குறுதி என்னவானது எனவும் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments