நீலகிரி மக்களுக்கு பாஜகவின் வாக்குறுதிகளை வெளியிட்டார் எல்.முருகன்

0 277

படுகர் இன மக்களை அவர்களது நீண்ட நாள் கோரிக்கையான எஸ்டி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி தொகுதிக்கான வாக்குறுதியாக பாஜக வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மலைவாழ் மக்களின் அவசர சிகிச்சைக்கு ஹெலி ஆம்புலன்ஸ் என்ற பெயரில் ஹெலிகாப்டர் மூலம் கோவைக்கு அழைத்துச் செல்லும் வசதி ஏற்படுத்தப்படும், விலங்கு -மனித மோதலை தடுக்க நிரந்தர நடவடிக்கை மற்றும் அதிக இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கிடப்பில் உள்ள பாண்டியர் -புன்னம்புழா பவானி ஆற்றுடன் இணைக்க முயற்சி எடுக்கப்பட்டு, சுமார் 3 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்படும் என்றும் எல்.முருகன் வாக்குறுதி அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments