என்னை சாப்பிடக் கூப்பிட்டீங்களா...?: ஓ.பி.எஸ் உரிமை... மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஓ.பி.எஸ். பிரசாரம்

0 401

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், வெந்நீர் வாய்க்கால் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

எல்லோரையும் சாப்பிட்டீங்களா எனக் கேட்ட ஓ.பி.எஸ்., என்னை யாராவது சாப்பிடக் கூப்பிட்டீங்களா என உரிமையோடு கேட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவதற்காக ராமநாதபுரம் தொகுதியை தேர்ந்தெடுத்து வைத்திருந்ததாகவும், தற்போது தன்னை அவர் நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மாதிரியுடன் தனது சின்னம் எந்த இடத்தில் இருக்கும் என்பதை விளக்கினார்.

அனைத்து நிர்வாகிகள் பெயரையும் எழுதிக் கொடுத்து விடுங்கள், அப்புறம் நான் பேசி விட்டு போன பிறகு திட்டிக்கிட்டு இருக்கக் கூடாது எனவும் ஓ.பி.எஸ். கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments