மூன்றாவது முறையாக மோடி ஆட்சியில் அமரும் போது கோவைக்கு முழு வளர்ச்சி அடையும் - அண்ணாமலை

0 213

மூன்றாவது முறையாக மோடி ஆட்சியில் அமரும் போது கோவைக்கு முழு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி கோவனூர் மற்றும் துடியலூரில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அண்ணாமலை, கடந்த 10 ஆண்டுகளில் கோவை தொகுதி எம்பிக்களாக இருந்தவர்கள் வளர்ச்சிக்கு உதவவில்லை என்று விமர்சித்தார்.

படித்த இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் என்றும், ஏரி குளங்களை தூர் வாரி நீரை சேமித்து விவசாய பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் அண்ணாமலை உறுதி அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments