முல்லை பெரியாறு விவகாரத்தில் தி.மு.க இழைத்த துரோகம் தொடர்கிறது: அண்ணாமலை

0 348

முல்லை பெரியாறு விவகாரத்தில் திமுக தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தேனி அ.ம.மு.க வேட்பாளர் டி.டி.வி தினகரனை ஆதரித்து பங்களாமேட்டில் பரப்புரை மேற்கொண்ட அவர், 2ஜி வழக்கில் கைது செய்வோம் என்ற காங்கிரஸ் மிரட்டலுக்கு பணிந்து முல்லை பெரியாறு விவகாரத்தில் போராட்டம் நடத்துவதை கைவிட்ட கட்சி தி.மு.க. என்று தெரிவித்தார்.

இந்தியை திணித்த அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அதே வடக்கு-தெற்கு பிரிவினைவாதத்தை முதலமைச்சர் பேசி வருவதாகவும் அண்ணாமலை விமர்சித்தார்.

14 ஆண்டு வனவாசத்தை முடித்துவிட்டு மீண்டும் அரசியலுக்கு வந்துள்ள டிடிவி தினகரனுக்கு அ.தி.மு.க.வினர் வாக்களிப்பார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments