நீச்சல் தெரியாமல் தண்ணீரில் இறங்கியதால் விபரீதம்... அடையாற்றில் விளையாடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0 438

சென்னை ஜாபர்கான்பேட்டையில், நீச்சல் தெரியாமல் அடையாற்றில் இறங்கி விளையாடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

தண்ணீரில் மூழ்கிய தனுஷை காப்பாற்ற முடியாததால் அச்சமடைந்த நண்பர்கள் இது பற்றி யாரிடமும் சொல்லாமல் வீடுகளுக்கு திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.

வெகுநேரமாகியும் மகன் வராததால், நண்பர்களிடம் விசாரித்து நடந்ததை தெரிந்துகொண்ட பெற்றோர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். நள்ளிரவில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments