மம்தாவுக்கு அப்புறம் .. தமிழச்சிதானாம்..ஆக்டிங்ல..! உடல் கருக்காமல் பிரச்சாரம் செய்வது எப்படி ?

0 770

சென்னையின் திமுக வேட்பாளர்கள் 3 பேரும் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் , மேயர் பிரியா ஆகியோருடன், தமிழக கத்தோலிக்க திருச்சபை தலைமை பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமியை சந்தித்து ஆதரவு திரட்ட மயிலாப்பூர் சாந்தோம் சர்ச்சில் காத்திருந்த போது தங்களுக்குள் கலகலப்பாக பேசிக் கொண்டனர்.

தயா நிதிமாறன் குனிந்து வணக்கம் வைத்ததை மா.சுப்பிரமணியன் கலாய்க்க... கையில் ஊன்று கோலுடன் வந்த தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை , மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு அப்புறம்.. என்று கூறிய தயாநிதிமாறன் கேமரா இருக்குதா ? என்று சுதாரித்துக் கொண்டார்.

உங்க வேட்பாளரை வெயிலில் கருக்காமல் வச்சிருக்கீங்க ? என்று சேகர்பாபுவிடம் மாசு சொல்ல , தான் முன்பை விட கருத்து விட்டதாக தமிழச்சி தங்கப்பாண்டியன் தனது கைகளை காண்பித்து அங்கலாய்த்தார்.

பின்னர் மேயர் பிரியாவிடம் உடல் கருக்காமல் இருப்பது எப்படி? என்று டிப்ஸ் கேட்டுக் கொண்டார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி வந்ததும், அவரிடம் ஒரு ஞாயிற்று கிழமை தான் உள்ளது என்று நினைவூட்ட அவரும் அதனை ஆமோதித்து தலையாட்ட, பின்னர் அனைவரும் ஆசீர்வாதம் பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments