கடலூரில் ரூ.8 லட்சம் மதிப்பிலான பேண்ட், சட்டை மூட்டைகள் பறக்கும் படை பறிமுதல்

0 230

கடலூர் மாவட்டம், ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேண்ட், சட்டைகள் இருந்த 28 மூட்டைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பாண்டிச்சேரியில் இருந்து கடலூரில் உள்ள கடைகளுக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட துணிகள் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments