திராவிட கட்சிகள் ஆட்சியில் வறுமை ஒழியவில்லை: பிரதமர் மோடி

0 211

திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

கோவை மேட்டுப்பாளையம் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர்,தமிழகத்தில் கொட்டிக் கிடக்கும் மனித ஆற்றலையும் திறமையையும் தி.மு.க. அரசு வீணடித்து வருவதாக தெரிவித்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தை முடக்க நினைக்கும் தி.மு.க. தமிழகத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட பிரதமர், மாநிலத்தில் எந்த கட்சி ஆண்டாலும் இருந்தாலும் நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் வளர வேண்டும் என்பதே பா.ஜ.க. அரசின் நோக்கம் என்றார்.

காங்கிரஸ் மற்றும் திமுக அரசுகள் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்யாத நிலையில், தமது அரசு 25 கோடி ஏழை மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டுள்ளதாக பிரதமர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments