தேர்தல் பறக்கும்படையினருக்கு பயந்து வீட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை திருடிச் சென்ற கும்பல்

0 428

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள சாஸ்தான்கரையைச் சேர்ந்த 85 வயது நிலத்தரகரான கார்லூஸ் என்பவர், நிலம் விற்ற தொகை 3 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்குப் பயந்து வங்கிக்குக் கொண்டு செல்லாமல் வீட்டிலேயே வைத்துள்ளார்.

நேற்று மதியம் கார்லூஸ் வெளியே சென்றபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், சிசிடிவி காட்சிகளில் பதிவான 4 பேரின் உருவங்களை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments