நம்பி பக்கத்தில் வந்து போட்டோ எடுத்தது குத்தமா ? காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியை கிழித்தெடுத்த பெண்..!

0 544

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், சாக்கவயல் பகுதியில் பிரச்சாரம் செய்த போது மூதாட்டி ஒருவர் கையில் கொடியுடன் காங்கிரஸ் கட்சிக்கு தான் நம்ம ஓட்டு என்று உரக்க கூவினார். அதைக் கண்டதும் உற்சாகம் அடைந்த கார்த்தி அவருடன் ஆர்வமாக போட்டோ எடுத்துக் கொண்டார்

அப்போது , வருடத்திற்கு ஒரு லட்சம் தருகிறேன் என்று சொல்வார்கள். விலைவாசியை ஏற்றிவிட்டு ஒரு லட்சம் தருவார்கள் வாங்கிக் கொள்கிறீர்களா என்ற அந்த பெண்மணி, அது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி என்பது கூட தெரியாமல் கிழி கிழியென கிழிக்க கார்த்தி சிதம்பரம் மிரண்டு போனார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments