அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தொடங்கி வைக்கும் ஸ்டாலின்: இ.பி.எஸ்.

0 249

அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தொடங்கி வைக்கும் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டு ஆட்சியில் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி என்ன புதித் திட்டங்களை கொண்டு வந்தார் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

திருச்சி தென்னூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர், அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மடிகணினி திட்டத்தை முடக்கிய தி.மு.க.வுக்கு மாணவர்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் திலகர் திடலில் பிரசாரம் மேற்கொண்ட இ.பி.எஸ்., மீத்தேன் எடுப்பதற்கு ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டதாக புகைப்படம் ஒன்றை காட்டினார்.

டி.ஆர். பாலு அளித்த பேட்டி ஒன்றையும் எல்.இ.டி. மூலம் திரையிட்டுக் காட்டிய இ.பி.எஸ்., டெல்டா மாவட்டங்களை அழிக்க தி.மு.க. முயன்றதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments