ஓசூர் அருகே ரூ.15 கோடி தங்க நகைகள் பறிமுதல்

0 431

பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு எடுத்து வரப்பட்ட 15 கோடி ரூபாய் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நள்ளிரவில் ஓசூர் நோக்கி வந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் கவச வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டபோது, 69 பெட்டிகளில் தங்க நகைகள் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.

டைட்டன் தொழிற்சாலைக்கு அவற்றை எடுத்து செல்வதாக ஓட்டுநர் கூறிய நிலையில், 45 பெட்டிகளில் இருந்த நகைகளுக்கு மட்டுமே ஆவணங்கள் இருந்ததால், எஞ்சிய 24 பெட்டிகளில் இருந்த நகைகளை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments