சென்னை சென்ட்ரலில் இடுப்பில் முடிந்து கொண்டு வந்த ஆந்திர மாநிலத்தவரிடம் ரூ.15.50 லட்சம் பறிமுதல்

0 298

வாராந்திர புவனேஸ்வர் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கோலி வெங்கட சத்யநாராயணன் என்பவர் துணி ஒன்றில் வைத்து 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இடுப்பில் கட்டியிருந்ததாக ரயில்வே போலீசார் நடத்திய சோதனையின் போது தெரியவந்தது.

தங்க நகை வாங்க அந்தப் பணத்தை கொண்டுவந்ததாகக் கூறிய அவரிடம் உரிய ஆவணம் ஏதும் இல்லாததால், பணத்தைப் பறிமுதல் செய்த போலீஸார் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments