மயிலாடுதுறையில் வனத்துறையினர் வைத்த கூண்டுகளில் சிக்காமல் போக்கு காட்டும் சிறுத்தை..!

0 277

மயிலாடுதுறையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் சிறுத்தை தொடர்ந்து பதுங்கியுள்ள நிலையில், சித்தர்காடு பகுதியில் கழுத்தில் கடிபட்ட நிலையில் ஆடு ஒன்று இறந்து கிடப்பதால் சிறுத்தை கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஆரோக்கியநாதபுரம் கருவைக்காடு பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டதால் அங்கு கூண்டுகள் வைத்தும் கேமராக்கள் வைத்தும் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகே உயிரிழந்து கிடந்த ஆடு சிறுத்தை தாக்கி இறந்ததா எனத் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments