கணவர் காணாமல் போனதால் பிழைப்பு தேடி கேரளா சென்ற பெண்.. தனது உடைமைகள் திருடுபோனதால் 2 பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

0 622

கோவை நஞ்சுண்டாபுரம் அருகே பெண் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்ற அந்தப் பெண்ணின் கணவர் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனார். 16 வயது மகனையும் 15 வயது மகளையும் வைத்துக்கொண்டு தவித்த வரலட்சுமி, பிழைப்புக்காக கேரளா நோக்கி புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வழியில் அவரது உடமைகளை யாரோ திருடிவிடவே, போத்தனூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். பணம், செல்போன் அனைத்தும் திருடுபோனதால், சாப்பிடக் கூட வழியின்றி,  தனியார் நிறுவனம் ஒன்றில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

பிறகு அங்கேயே நீண்ட நேரம் சுற்றித் திரிந்த மூவரும் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments