ஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி : வடகொரியா

0 392

ஒலியை விட வேகமாக செல்லும், திட எரிபொருள் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனையிட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

வழக்கமாக திரவ ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், அலுமினியம் பவுடர் மற்றும் அமோனியம் பெர்குலோரேட் கலவையை எரிபொருளாக பயன்படுத்தும் இந்த ஏவுகணை, குறைந்த நேரத்தில் அதி வேகத்தை எட்டுவதுடன், இவற்றை கண்டறிவதும் கடினம் என கூறப்படுகிறது.

வடகொரியா, கடலில் ஏவுகணை சோதனை நடத்தியதாகக் கூறி ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென்கொரியா கண்டனம் தெரிவித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments