நல்ல திட்டங்களை நிறுத்தியதில் தி.மு.க அரசு சாதனை படைத்துள்ளது: இ.பி.எஸ்

0 248

மகளிர் உரிமை தொகை திட்டம் நடைமுறைக்கு கொண்டுவர அ.தி.மு.க.தான் காரணம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளர்.

சேலம் எடப்பாடி அருகே வீரப்பம்பாளையத்தில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், சுவர் விளம்பரத்திற்கு அனுமதி அளிக்காதவர்களின் உரிமைத்தொகை நிறுத்தப்படும் என திமுகவினர் பெண்களை மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத திமுக அரசு, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களையும் நிறுத்திவிட்டதாகவும் இ.பி.எஸ் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments