சட்டை முழுவதும் பாக்கெட்... பாக்கெட் முழுவதும் பணம்.. ஆந்திராவில் இருந்து வந்த பயணியிடம் ரூ.13 லட்சம் பறிமுதல்..!

0 374

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆந்திராவில் இருந்து மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்தடைந்த ஜமாதூர் மெகபூப் பாஷா என்பவரின் சட்டையில் பல்வேறு பாக்கெட்களில் இருந்த 13 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மகனின் திருமணத்திற்கு சென்னையில் நகை வாங்க பணம் கொண்டு வந்ததாக அவர் கூறிய நிலையில், உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அனுப்பி வைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments