வாக்குறுதி என்று சுட்ட வடை... இட்லி... பூரி... என்னாச்சி ? திமுக பிரசாரத்தை கலங்கடித்த கருஞ்சட்டைக்காரர்

0 514

வேலூர் சத்துவாச்சாரியில் நடந்த திமுக பிரச்சாரக் கூட்டத்திற்குள் கருப்பு சட்டை அணிந்து புகுந்த நபர், 5 ஆண்டுகள் கழித்து ஓட்டு கேட்டு வருகிறீர்களே, மக்களுக்கு என்ன செய்தீர்கள்? பொய்யான வாக்குறுதி என்று வடை , இட்லி, பூரி சுட்டீர்களே.. செய்தீர்களா ? என்று கேள்வி எழுப்பினார்

தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் கொடுக்கும் 1000 ரூபாயால் பெண்கள் பான்ஸ் பவுடர் , பேர் அண்ட் லவ்லி போட்டிருப்பதாக கூறுகிறாரே வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தீர்களா ? என்றும் கேள்வி எழுப்பினார

தங்களின் அருமை பெருமைக்கு ஆபத்து வந்ததை உணர்ந்த திமுகவினர் அந்த கருஞ்சட்டை அணிந்த நபரை தள்ளிக்கொண்டு தனியாக சென்று நீ நாம் தமிழர் கட்சி காரன் தானே என கேட்டு தாக்க முயன்றனர்

இந்த சம்பவத்தை செய்தியாளர்கள் படம் பிடிப்பதை அறிந்து அந்த நபரை விட்டுச்சென்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments