அருணாசல பிரதேச சட்டமன்றத்துக்கு 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு.. எதிர்த்து யாரும் போட்டியிடாததால் வாக்குப்பதிவுக்கு முன்பே வெற்றிபெற்றதாக அறிவிப்பு

0 556

அருணாசல பிரதேசத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் பெமா காண்டு, துணை முதலமைச்சர் சௌவ்னா மெய்ன் உள்ளிட்ட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளனர்.

60 இடங்களைக் கொண்ட சட்டசபையின் அனைத்து தொகுதிகளில் பாஜகவும் காங்கிரஸ் 34 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது.

வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் போட்டியிடாததால், அவர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments