தம்பிகளைக் கண்டு.. விவசாயி சின்னம் வேட்பாளர் வாபஸ்.. வாபஸ் வாங்க மறுத்தவருக்கு மைக்கால் தர்ம அடி..!

0 551

மானின் நாம் தமிழர் கட்சியிடம் இருந்து பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் கரும்பு விவசாயி சின்னத்தில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த பாரதிய பிரக்யா கட்சி வேட்பாளர் சந்திர சேகர் தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்

நாம் தமிழர் கட்சியினர் தன்னிடம் கேட்டுக் கொண்டதாலும் அவர்களின் உழைப்பை பார்த்து வியந்து போய், தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதாகவும் சந்திரசேகர் தெரிவித்தார்

அதே நேரத்தில் கிருஷ்ணகிரி தொகுதியில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் திராவிட தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் ஆறுமுகம்,

நாம் தமிழர் தம்பிகள் சிலர் தன்னை மைக்கால் தாக்கியதாகக் கூறி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளது குறிப்பிடதக்கது

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments